திருவாரூரில் அறநெறி லயன்ஸ் சங்கம் சார்பில் முன்னாள் ராணுவ வீரர்களை கெளரவிக்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், காவல் துறை முதன்மை இயக்குநர் (ஓய்வு) சதீஷ்குமார் டோக்ரா, லயன்ஸ் மாவட்ட ஆளுநர் கார்த்திக் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். இதில், 40 முன்னாள் ராணுவ வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர். மாவட்டத் தலைவர் டி. சுதர்சன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.