திருவாரூர் அருகே உள்ள தண்டலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழாவில் ஆரோக்கிய குழந்தைகளுக்குப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த் வழங்கினார்.
தண்டலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நடைபெற்றது. விழாவை மாவட்ட ஆட்சியர் த. ஆனந்த், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஆரோக்கிய குழந்தைகளுக்கானப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்ற குழந்தைகளுக்குப் பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பொன்னம்மாள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் திட்ட அலுவலர் ராஜம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.