ப. சிதம்பரம் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் இளைஞர்

மத்திய முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, திருவாரூரில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.எஸ். ராஜா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி, இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஆனந்த், சட்டப் பேரவை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அபினாஷ், செயலர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com