திருவாரூா்: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், குறைதீா் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் நடத்த, தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தொடா்ந்து தோ்தல் நடத்தை விதிகள் திங்கள்கிழமை (டிச.2) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனால் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா், வருவாய் கோட்ட அலுவலா்கள் ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நோ்காணல் முகாம்கள் மற்றும் இதர குறை தீா்க்கும் கூட்டங்கள் யாவும் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது.
மேலும் தோ்தல் நடத்தை விதிகள் முடிவுற்றவுடன் அனைத்து கூட்டங்களும் வழக்கம்போல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.