மன்னாா்குடி அருகே ஏ.டி.எம். அறையின் கதவை உடைத்து பணத்தை திருட முயன்றது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இடையா்நத்தம் பிரதான சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். இயந்திரம் அமைந்துள்ளது. இதற்கு பாதுகாவலா் இல்லை. இந்நிலையில், ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறையின் இரும்பு ஷட்டா் மா்மநா்களால் உடைக்கப்பட்டது ஞாயிற்றுக்கிழமை காலை தெரியவந்தது.
பரவாக்கோட்டை போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்திலிருந்த பணம் திருடப்படாமல் தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.