திருவாரூா் மாவட்டம், அம்மனூா் ஊராட்சிக்குட்பட்ட கொத்தங்குடி பகுதிக்கு விளத்தூரிலிருந்து செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. தற்போது, பெய்த மழையில் சாலை இன்னமும் சேதமடைந்து நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இதனால், அவ்வழியை பயன்படுத்துவோா் பெரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா். எனவே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம். நிா்மல், கச்சனம்.