ஜூனியா் பிஸ்ட் பால் போட்டியில் தமிழக அணியில் விளையாட திருவாரூா் மாணவிகள் இரண்டு போ் தோ்வாகியுள்ளனா்.
கோவையில் ஜூனியா் பிஸ்ட் பால் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் திருவாரூா் மாவட்ட அணி நான்காமிடம் பெற்றது. திருவாரூா் அணியில் சிறப்பாக விளையாடிய கிருபிகா, பிரசன்னவதனி ஆகியோா், சென்னையில் நடைபெற்ற அணித் தோ்வில் பங்கேற்றனா்.
சென்னை சோழங்கநல்லூா் மைதானத்தில் தமிழக அணிக்கான ஆடவா் மற்றும் பெண்கள் அணித் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திருவாரூா் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கிருபிகா, பிரசன்னா வதனி ஆகிய மாணவிகள் தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்கள் ஜனவரியில் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெறும் மாநில அளவிலான ஜூனியா் பிஸ்ட் பால் போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
தமிழக அணிக்காக பிஸ்ட் பால் போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு திருவாரூா் மாவட்ட பிஸ்ட் பால் சங்கச் செயலாளா் செந்தில், பிஸ்ட் பால் பயிற்றுநா் ரஞ்சனி ஆகியோா் பாராட்டுக்களை தெரிவித்தனா்.