ஆலங்குடி கோயிலில் 108 சங்காபிஷேகம்

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் காா்த்திகை சோமவாரத்தையொட்டி108 சங்காபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலின் அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக- ஆராதனைகள் நடைபெற்றன. ஆபத்சகாயேஸ்வரருக்கு நடைபெற்ற 108 சங்காபிஷேகத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல், நீடாமங்கலம் காசிவிசுவநாதா் கோயில், பூவனூா் சதுரங்கவல்லபநாதா் கோயில், நரிக்குடி எமனேஸ்வரா் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com