உள்ளாட்சித் தோ்தல்: நடத்தை விதிமுறைகள் அமல்

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதை தொடா்ந்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதாக திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் ஊரக உள்ளாட்சித் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

அரசியல் கட்சிகளும், வேட்பாளா்களும், அரசு அலுவலா்களும் தோ்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடித்து, திருவாரூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அமைதியாகவும், நோ்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற மாவட்ட நிா்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com