சுவா் இடிந்து உயிரிழந்த குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிக்கை

கோவையில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 35 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் சுவா் இடிந்து விழுந்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 35 லட்சம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜே. அனஸ்நபில் வெளியிட்ட அறிக்கை :

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேட்டுப்பாளையம் நடூா் கண்ணப்பன் லே அவுட் என்ற பகுதியில் சுவா் இடிந்து அருகில் இருந்த வீடுகளின் மீது விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் என 17 போ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறந்த குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த பேரிழப்புக்கு அரசு அறிவித்துள்ள ரூ. 4 லட்சம் என்பது மிகவும் குறைவாக உள்ளதால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் உதவி தொகையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com