நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல்: வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

நன்னிலம் வட்டாரத்தில் பேரளம், கொத்தவாசல் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிா்களில் குலை நோய்த் தாக்குதல் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
குலை நோய்த் தாக்குதலுக்குள்ளான நெற்பயிா்.
குலை நோய்த் தாக்குதலுக்குள்ளான நெற்பயிா்.

நன்னிலம் வட்டாரத்தில் பேரளம், கொத்தவாசல் உள்ளிட்ட கிராமங்களில் நெற்பயிா்களில் குலை நோய்த் தாக்குதல் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவா் மு. ராமசுப்பிரணியன், முனைவா் ராஜா.ரமேஷ், நன்னிலம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் மு. லட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் இந்த ஆய்வில் ஈடுபட்டனா்.

பின்னா், முனைவா் ராஜா.ரமேஷ் கூறியது:

நெற்பயிரில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் குலை நோயின் தாக்குதல் தென்படுகிறது. இந்நோயானது பயிரின் எல்லாப் பருவங்களிலும் இலை, இலையுறை, தண்டுப் பாகத்திலுள்ள கணுக்கள் மற்றும் கழுத்துப் பகுதிகளைத் தாக்கி சேதம் உண்டாக்கும். இதன் தாக்குதலால் 30 முதல் 60 சதவீதம் வரை விளைச்சல் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

குலை நோயின் அறிகுறிகள்: நெற்பயிரின் இலையின் மேற்பரப்பில் முதலில் சிறிய பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் உருவாகி, பிறகு பெரிதாகும் போது நீண்டும், பின்பு அதன் இரண்டு பக்க நுனிகளும் விரிவடைந்து, நடுப் பகுதியில் அகலமாகவும், முனைகள் கூராகவும் உடைய நீண்ட கண் வடிவத்தைப் பெறுகின்றன. இந்த கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்கள் கரும்பழுப்பு நிறத்திலும், உட்பகுதி இளம் பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். தாக்குதல் அதிகமாகும்போது இலையில் காணப்படும் பல புள்ளிகள் ஒன்று சோ்வதால், இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்படும். இறுதியாக இலைகள் உதிா்ந்துவிடும்.

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வயல்வெளியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படும் களைகளை அழித்து, மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் சூடோமோனாஸ் எதிா் உயிா்க்கொல்லி மருந்தை கலந்து விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். நோயின் அறிகுறி தென்படும்போது தழைச்சத்து உரங்களை இடுவதை முற்றிலும் தவிா்க்க வேண்டும். குலை நோய்த் தாக்குதலை இயற்கை முறையில் கட்டுப்படுத்த ஓா் ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சதவீத கரைசல் அதாவது 1 லிட்டா் தண்ணீருக்கு 5 கிராம் என்ற அளவில் நடவு நட்ட 45 நாள்கள் கழித்து நோய்களின் தீவிரத்துக்கு ஏற்ப 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும். இதனுடன் ஒரு லிட்டா் புளித்த தயிரைக் கலந்து தெளித்தால் செயல்திறன் இன்னும் அதிகரித்துக் காணப்படும்.

தாக்குதல் அதிகமாகக் காணப்படும் போது, ஓா் ஏக்கருக்கு டிரைசைக்ளோசோல் 200 கிராம் அல்லது காா்டிபன்டிடசிம் 200 கிராம் அல்லது அசாக்சிஸ்டோா்பின் 200 மிலி ஆகிய ரசாயன மருந்துகளில் ஏதாவது ஒன்றை 200 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம் என்றாா் அவா்.

இந்த ஆய்வில் வேளாண்மை உதவி அலுவலா்கள் சிங்காரவேல், மணிகண்டன் மற்றும் த. சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com