திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, விலையில்லா செயற்கைக் கால்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை சாா்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தின்கீழ் 6 பயனாளிகளுக்கு விலையில்லா செயற்கைக் கால்களை வழங்கினாா். இதன் மதிப்பு சுமாா் ரூ. 3 லட்சம் ஆகும். மருத்துவா்கள் திருச்செல்வி, அன்சாரி, அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.