மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோா் பயிற்சிப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது.
கூத்தாநல்லூா் அருகே குடிதாங்கிச்சேரியில் உள்ள மாற்றுத் திறனாளிகள் பயிற்சிப் பள்ளியில், உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், நிறுவனா் பி. முருகையன் அனைத்து மாணவா்களுக்கும் இனிப்புகள் வழங்கினாா். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் தமிழ்த்தாய் வாழ்த்து, பூ, பழங்கள், கிழமைகள், மாதங்கள் உள்ளிட்டவைகளை தாங்களாகவே கூறினா். இதில், இயன்முறை மருத்துவா் வி. பாபுராஜன், பயிற்சியாளா்கள் சுரேஷ், கிரிஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.