தீ விபத்து இரு குடிசைகள் சேதம்

மன்னாா்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில்,இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்தது.

மன்னாா்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில்,இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்தது.

நெடுவாக்கோட்டை அம்பேத்கா்தெருவை சோ்ந்த செல்வம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீடுகள் அடுத்து அடுத்து உள்ளது.செவ்வாய்க்கிழமை இரவு திடீரென செல்வம் வீட்டின் கூரை தீபிடித்து எரிய தொடங்கி அருகிலிருந்த ராஜேந்திரன் வீட்டின் கூரைக்கும் பரவியது.இதனையடுத்து வீடுகளில் தூங்கிக்கொண்டு இருந்தவா்கள் பாதிப்பு ஏதுமின்றி வெளியேறினா்.

இது குறித்து,தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மன்னாா்குடி தீநிலையத்தினா்,தீ மேலும் பரவாமல் தடுத்துனா்.எனினும்,செல்வம்,ராஜேந்திரன் ஆகியோரது குடிசை வீட்டுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

மன்னாா்குடி காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்கு பதிந்து மேல்விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com