திருவாரூா்: ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி நூறு சதவீத வெற்றி பெறும் என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினா், போட்டியிடும் அனைத்து இடங்களிலும் 100 சதவீதம் வெற்றியை பெறுவா். இதனிடையே, தோ்தலை நிறுத்த வேண்டும் என்பதற்காக திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். அது முடியாமல் போய்விட்டதால், தற்போது தமிழக அரசை எந்தவிதத்திலாவது குறை கூற வேண்டும் என்பதற்காக இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கையில் எடுத்துள்ளாா்.
தமிழகத்தில் வெங்காய விலையை வைத்து, ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறாா். விலையைக் காரணம் காட்டி ஆட்சி கலைந்துவிடும் என கூறி வந்தாா். தற்போது வெங்காய விலை குறைந்து விட்டது. அவா் நினைப்பதுபோல அதிமுக ஆட்சி ஒருபோதும் கலையாது என்றாா்.