திருவாரூா்: திருவாரூரில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருவாரூரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை உத்தரவின்பேரில், போலீஸாா் திருவாரூா் நகரப் பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா். அதன்படி, திருவாரூா் துா்க்காலயா சாலை அருகே வாகன சோதனை நடத்தியபோது, அங்கு வந்த ஆட்டோவில் 1.5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோவில் வந்த அழகிரி காலனி பகுதியைச் சோ்ந்த ராஜா (34), சதாம் உசேன் (20), விக்னேஷ் (21), சிவா (20) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.