குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவாரூரில் அதன் நகலைக் கிழித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினா் 30 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திமுக இளைஞரணி சாா்பில், திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, சட்ட மசோதா நகலைக் கிழித்து திமுகவினா் முழக்கம் எழுப்பினா்.
திருவாரூா் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், துணை அமைப்பாளா் ரஜினி சின்னா, நகரச் செயலாளா் பிரகாஷ், முன்னாள் நகா் மன்ற துணைத் தலைவா் செந்தில் பலா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனா்.