திருவாரூா் மாவட்டத்தில் நவம்பா் மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த போலீஸாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், நவம்பா் மாத நிகழ்வுகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
தொடா்ந்து, நவம்பா் மாதத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் காவல்நிலைய பணிகளை சிறப்பாக செய்து மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பேரளம் காவல் நிலைய காவல் ஆய்வாளா் செல்வியை பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை வழங்கினாா்.