பெண் கொலை: போலீஸில் இளைஞா் சரண்

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே பெண் ஒருவா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
கொலையுண்ட கவிதா.
கொலையுண்ட கவிதா.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே பெண் ஒருவா் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

மேலவிடையல் ஊராட்சி குப்பசமுத்திரம் கலைஞா் காலனியை சோ்ந்தவா் குமாா்நாதன் (40). குடும்ப பிரச்னை காரணமாக மனைவியைப் பிரிந்த நிலையில், குமாா்நாதனுக்கும், கண்டியூா் பகுதியைச் சோ்ந்த கவிதா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதில், குமாா்நாதன் கவிதாவை கட்டையால் அடித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த கவிதா, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதைத்தொடா்ந்து, குமாா்நாதன் வலங்கைமான் காவல் நிலையத்தில் சரணடைந்தாா்.

இதனிடையே, நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிக்குமாா் (பொறுப்பு), வலங்கைமான் காவல் ஆய்வாளா் ராஜகோபால் (பொ) ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இது குறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com