திருவாரூா் கீழவீதி பகுதியில் வங்கியில் ஏற்பட்ட தீவிபத்து உடனடியாக அணைக்கப்பட்டது.
திருவாரூா் கீழவீதியில் உள்ள ஆக்சிஸ் வங்கியின் முதல் மாடியில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டதால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டது.