நன்னிலம் பேருந்து நிலையம் ரூ. 3 கோடியில் விரிவாக்கம்: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பேரூராட்சியில் ரூ. 3 கோடி மதிப்பில் பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே. கோபால், முன்னிலை வகித்தார்.  
இப்பேருந்து நிலையம் 42 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 24 வணிகக் கடைகள் மற்றும் உணவகம், இரண்டு பயணிகள் காத்திருப்புக் கூடம், 10 பேருந்து நிறுத்துமிடம், கழிப்பறை,  200 மீட்டருக்குச் சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. 
அடிக்கல் நாட்டி, பணிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் வருவாய்க் கோட்டாட்சியர் முருகதாஸ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) ப. குற்றாலிங்கம், உதவி செயற்பொறியாளர் விசுவநாதன், பேரூராட்சி செயல் அலுவலர் சோ. சிவக்குமார், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் சம்பத், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் இராம. குணசேகரன், தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் துணைத் தலைவர் சி.பி.ஜி.அன்பு, கூட்டுறவு சங்கத் தலைவர் பக்கிரிசாமி உள்ளிட்டோர்
கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com