நீடாமங்கலம் அருகேயுள்ள பரப்பனாமேடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி தொடங்கியது.
அன்னம்மாள் தொண்டு நிறுவன இயக்குநர் இ. பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பயிற்சியை ஓய்வுபெற்ற காவல் துறை அலுவலர் நேரு தொடங்கி வைத்தார். இதில், தொண்டு நிறுவன பணியாளர் வினோதினி , விக்னேஸ்வரி, அருணா, தையல் ஆசிரியர் புனிதா, களப்பணியாளர் மாலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.