நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் கண் பரிசோதனை செய்யப்பட்ட 6 முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் 50 பேருக்கு கண் கண்ணாடி செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியர் எஸ். காந்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், முதுநிலை ஆசிரியர் ஆர். வீராசாமி, வட்டார கண் மருத்துவ உதவியாளர் அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.