கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கருப்பூர், அரிவலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மனைவி தீபா (29). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், தீபா பிப்ரவரி 7-ஆம் தேதி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், புதன்கிழமை காலை இறந்தார். வடபாதிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.