தீக்காயமடைந்த பெண் சாவு

கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 

கூத்தாநல்லூர் அருகே தீக்காயமடைந்த பெண் புதன்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தார். 
வடபாதிமங்கலம் காவல் சரகத்துக்கு உள்பட்ட கருப்பூர், அரிவலூர் பகுதியைச் சேர்ந்த மோகன்தாஸ் மனைவி தீபா (29). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்படுமாம். இந்நிலையில், தீபா பிப்ரவரி 7-ஆம் தேதி தன் மீது  மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், புதன்கிழமை காலை இறந்தார். வடபாதிமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com