தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

திருவாரூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்றதாக சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடமிருந்து நகையை பறித்துச் சென்றதாக சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சித்தாநல்லூர், சேமங்கலம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் மனைவி மல்லிகா (48). இருவரும் வெள்ளிக்கிழமை இரவு, வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் பின்பக்கம் வழியாக வந்த மர்ம நபர்,  மல்லிகா கழுத்தில் அணிந்திருந்த தாலியுடன் கூடிய 4 பவுன் தங்க செயினை அறுத்துச் சென்று விட்டாராம். புகாரின் பேரில் திருவாரூர் வட்டார போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com