கொடி காத்த திருப்பூர் குமரன், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் நினைவு நாளை முன்னிட்டு, அவர்களது உருவப் படத்துக்கு திருவாரூரில் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருவாரூர் அருகே உள்ள மேட்டுப்பாளையம் சுபவித்யாலயா பள்ளியில் காந்தியன் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருப்பூர் குமரன், லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் உருவப் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. காந்தியன் அறக்கட்டளைத் தலைவர் தெ. சக்தி செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காந்தியவாதி வே. துரைராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.