நன்னிலம் வட்டம், பேரளம் அருகே உள்ள கந்தன்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தன்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. முருகன் கோயில் கொண்டுள்ள தலங்களில் அவர் விரும்பி குடிகொண்ட தலமாக இக்கோயில் போற்றப்படுகிறது. இதனால், இப்பகுதிக்கு கந்தன்குடி என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் மார்கழி மாத சனிவார உத்திராட நட்சத்திர சஷ்டியையொட்டி, சுவாமிக்கு சிறப்பு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள்
கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.