மன்னார்குடியில் சாலையைக் கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கரூரிலிருந்து ஜல்லி கற்கல் ஏற்றிக்கொண்டு, வேதாரணயம் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி, மன்னார்குடி கீழப்பாலம் காளியம்மன்கோவில் அருகே வரும்போது, சாலையைக் கடக்க முயன்ற முதியவர் மீதுமோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முதியவரை போலீஸார் மீட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு சிகிச்சைப் பலன்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர் யார் என்பது தெரியவில்லை. அவருக்கு சுமார் 65 வயது இருக்கம் என்றும் வேஷ்டி, சட்டை அணிந்திருந்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.