19- இல் பொது விநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.19- ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜன.19- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் திருவாரூர் வட்டம், வைப்பூரில் திருவாரூர் வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் வட்டம், சிறுபுலியூரில் திருவாரூர் சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம், விஷ்ணுபுரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் வட்டம், சித்தன்வாழூரில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் தலைமையிலும், நீடாமங்கலம் வட்டம், ஊர்குடியில் திருவாரூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம், வெங்கத்தான்குடியில் மன்னார்குடி வருவாய்க் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம், விளக்குடியில் மன்னார்குடி சரக துணைப் பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம், வடகோவனூரில் திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச்சாலை லிட் துணைப் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் தலைமையிலும், பொது விநியோகத் திட்ட சிறப்பு பொது மக்கள் குறை கேட்கும் கூட்டம், ஜன.19-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே, அந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடை மாற்றம், முகவரி மாற்றம் போன்றவை குறித்தும் கோரிக்கை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com