திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில், ஆயுதப்படை மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவை தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜே. லோகநாதன் தொடங்கி வைத்தார். விழாவுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். துரை தலைமை வகித்தார்.
இதில் திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.
விழாவில் கலைநிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், கோலப் போட்டி, இசை நாற்காலி, கயிறு இழுத்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. விழாவின் முடிவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவல்துறையினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் ஆர். ஜான் ஜோசப் (தலைமையகம்), குமார் (மது அமலாக்கப்பிரிவு), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் நடராஜன், தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்பட நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.