மன்னார்குடி அருகே முன்விரோதம் காரணமாக செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
வடுவூர் வடக்குப்தோப்பு கீழத் தெருவைத் சேர்ந்தவர் ஜி. சிலம்பரசன்(22). அதே பகுதியை சேர்ந்தவர் ரா. வீரமணி (21). முன்விரோதம் காரணமாக இருவருக்கும் திங்கள்கிழமை வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வீரமணி, இவரது உறவினர் ஆர். லெட்சுமணன் (50) ஆகியோர் சேர்ந்து சிலம்பரசனை உருட்டுக்கட்டையால் தாக்கினராம். இதில், காயமடைந்த சிலம்பரசன் உடனடியாக மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, வடுவூர் போலீஸார் வழக்குப் பதிந்து வீரமணி, லெட்சுமணன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.