அரசுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பரிசு

நீடாமங்கலம் 12-ஆவது வார்டில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் பத்தாவது மற்றும் பிளஸ் 2-வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. 

நீடாமங்கலம் 12-ஆவது வார்டில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் பத்தாவது மற்றும் பிளஸ் 2-வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. 
பரிசுகளை கிரீன் நீடா அமைப்பாளர் மு. ராஜவேலு, முன்னாள் தீயணைப்பு நிர்வாக அலுவலர் வி. ராஜகோபால், உதவும் மனங்கள் அமைப்பின்  தலைவர் குமார், நீடாமங்கலம் நற்பணி மன்றத் தலைவர் மைதீன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
ராஜாராம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் வைத்தியலிங்கம் மற்றும் விஸ்வநாதன், பாபு மனோகரன், கலாம் மாணவர் இயக்க மாவட்டத் தலைவர் ரியாஸ், ஆசிரியைகள் செல்வி, தேவிலட்சுமி திலகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com