சிவகங்கையில் மடிக்கணினி வழங்கக் கோரி போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கிய காவல் துறையினரைக் கண்டித்து திருவாரூரில் திங்கள்கிழமை இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை, இதுகுறித்து போராட்டம் நடத்தும் மாணவர்களை போலீஸார் தாக்குகின்றனர், சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் மாணவர்களை போலீஸார் தாக்கியுள்ளனர், இதுகண்டிக்கத்தக்கது என கூறி திருவாரூரில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டத் துணைச் செயலர் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலர் சுர்ஜித், மாநில துணைச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.