குடிமராமத்துப் பணி:  கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிமராமத்துப் பணி திட்டத்தின்கீழ், ரூ. 18 லட்சம் செலவில்

திருத்துறைப்பூண்டி பகுதியில் குடிமராமத்துப் பணி திட்டத்தின்கீழ், ரூ. 18 லட்சம் செலவில் தூர் வார உள்ள மீனாட்சி வாய்க்கால் மதகு பகுதிகளை பொதுப்பணித்துறை குடிமராமத்துப் பணி கண்காணிப்பு அலுவலர் பத்மநாபன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார் .
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் குடிமராமத்துப் பணியின்கீழ், ரூ.18 லட்சம் செலவில் புனரமைப்பு செய்ய வேண்டிய மீனாட்சி வாய்க்கால் மதகு பகுதிகளைப் பார்வையிட்ட அவர், விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசணை மேற்கொண்டார். மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தூர் வார வேண்டிய பகுதிகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். 
ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கண்ணப்பன், உதவி பொறியாளர் தமிழரசன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com