திருக்குவளையில் கருணாநிதி இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு சனிக்கிழமை வந்தார். 


திமுக இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம், திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவர் மு. கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு சனிக்கிழமை வந்தார். 
அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மு. கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் என். கெளதமன், சட்டப் பேரவை உறுப்பினர் உ. மதிவாணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சோ.பா. மலர்வண்ணன், கீழையூர் ஒன்றியச் செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், தலைமை செயற்குழு உறுப்பினர்  இள. மேகநாதன், வேளாங்கண்ணி பேரூராட்சி செயலாளர் மரிய சார்லஸ் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர்  கலந்து கொண்டனர்.
பொறையாறில்...
இதைத்தொடர்ந்து, பொறையாறு அருகே ராஜூபுரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சத்தியேந்திரன், ஞானவேலன், ஒன்றியச் செயலாளர்கள் அப்துல் மாலிக், அன்பழகன், தரங்கம்பாடி நகரச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com