வலங்கைமானில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, கடைத்தெரு மற்றும் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, மீண்டும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, கனிமவளத் துறை அமைச்சக துணைச் செயலாளர் என்.கே. நாயர், துணை இயக்குநர் (சியுயுசி) மிராஜ்குமார் சர்மா ஆகியோர் பேரணியை தொடங்கி வைத்தனர்.
உதவித்திட்ட அலுவலர் வாசுதேவன், ஒன்றிய ஆணையர் சண்முகம், கூடுதல் ஆணையர் சிவக்குமார் மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பேரணியில் பங்கேற்றனர்.