தொழிற்சாலைகள் தனியார்மயம்: அமைச்சர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்

தொழிற்சாலைகள் தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல

தொழிற்சாலைகள் தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல என்று தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலர் மனோகரன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஜூலை 26-ஆம் தேதி சுக்ராம் சிங் யாதவ், ஸ்ரீ விசாம்பர் பிராசாத் நிசாத், மற்றும்  சாயா வர்மா இணைந்து மக்களவை மேலவையில் ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகள் தனியார் மயம் குறித்து எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பீயூஸ் கோயல் பதில் அளிக்கையில் உற்பத்தி தொழிற்சாலைகளை கார்பரேட் நிறுவனங்களாக மாற்ற செயல் திட்டம் தயாரிக்கப்படுகிறது. மேலும் நவீன தொழில்நுட்பம், நிர்வாக தன்னாட்சி, மேம்படுத்தப்பட்ட நிர்வாகத்தால் சிறந்த செயல்திறன், ஏற்றுமதி தகுதி, வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழிலாளர்களுக்கு கூடுதல் சலுகைகள், சிறு குறு நடுத்தர வர்த்தகம்,  மூலதனம் கவர்தல், ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் உற்பத்தியில் இந்தியாவை சர்வதேச முணையமாக மாற்றுதல் என ஒன்பது காரணங்களை முன் நிறுத்தி இருக்கிறார். 
அதே நேரம் 4,200 பெட்டிகள் உற்பத்தி திறன் கொண்ட ரயில் பெட்டி தொழிற்சாலைகள் 6,076 பெட்டிகளையும், 500 என்ஜின்கள் உற்பத்தித் திறன் கொண்ட தொழிற்சாலைகள் 734 ரயில் என்ஜின்களையும் உற்பத்தி செய்கின்றன என்பதை ஏற்றுக்கொண்டு இருக்கிறார். அரசு துறைகளை விட கார்பரேட் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. படிப்படியாக தொழிற்சாலைகள் கார்பரேட் நிறுவனங்களாக மாற்றப்படும் என தெரிவித்து இருக்கிறார். 
வாராணசி டீசல் என்ஜின் உற்பத்தி தொழிற்சாலை செனகல், மலேசியா, மியான்மர், இலங்கை, வியட்நாம் என பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஈரான் நாடு 200 என்ஜின்கள் கோரி இருக்கின்றன. நிதியாண்டு 2016-17 வெளி நிறுவனங்களிடம் ஈட்டியது ரூ.185 கோடி. கடந்த 2018- ம் ஆண்டு இதன் உற்பத்தி 323 என்ஜின்கள். அதே நேரம் பிகாரில் உள்ள அமெரிக்க ஜெனரல் மோட்டார் நிறுவனம் பத்து ஆண்டுகளில் தான் 1000 டீசல் என்ஜின்கள் உற்பத்தி செய்துதர இருக்கிறது.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப் தொழிற்சாலை பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம், பங்காளதேஷ் நாடுகளுக்கு பெட்டிகள் ஏற்றுமதி செய்கின்றன. ஆண்டு உற்பத்தி 3 ஆயிரம் பெட்டிகள். 2016-17 நிதியாண்டு வெளி விற்பனையில் ஈட்டியது. ரூ.1,251 கோடி 
கபுர்தாலா ரயில்கோச் தொழிற்சாலை, செனகல், மாலி, மியான்மர்  நாடுகளுக்கு ஏற்றுமதியு செய்கின்றன. உற்பத்தி 1,500 பெட்டிகள். 2016-17 நிதியாண்டு வெளி நிறுவனங்களிடம் ஈட்டியது ரூ. 248 கோடி. பெங்களரூ  ரயில் வீல் தொழிற்சாலை, ஆண்டுக்கு ஒரு லட்சம் அச்சு மற்றும் இரண்டு லட்சம் சக்கரங்கள் தயாரிக்கின்றன. 2016-17 நிதியாண்டு வெளி நிறுவனங்களிடம் ஈட்டியது ரூ. 37 கோடி. பாட்டியாலா, டீசல் லோகோ மார்டனைசேஷன் ஒர்க்ஸ் தொழிற்சாலை பழைய டீசல் என்ஜின்களை புனரமைப்தோடு ஆண்டுக்கு 60 அல்கோ என்ஜின்கள் மற்றும் 1700 ஏ.சி மின்சார மோட்டார்கள் தயாரிக்கின்றன. ரெய்பரேலி மார்டன் கோச் பேக்டரி கடந்த நிதியாண்டு தயாரிப்பு 1,425 பெட்டிகள். 
அரசுடைய ரயில்வே தொழிற்சாலைகள் குறைந்த கட்டமைப்பு வசதியில் சாதனைகள் நிகழ்த்தி கார்பரேட் நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படுகின்றன. வெளி மூலதனத்தை ஈர்த்து வருவதோடு ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகின்றன. தகுதிக்கு மீறி தொழிற்சாலைகள் உற்பத்திக்கு தொழிலாளர்கள் அற்பணிப்பு மிக்க உழைப்புதான் காரணம். தொழிற்சாலைகள் தனியார் மயமாக்க ரயில்வே அமைச்சர் முன்வைக்கும் காரணங்கள் ஏற்புடையதல்ல. தொழிலாளர்களை காயப்படுத்துகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com