மாட்டுக் கொட்டகை தீக்கிரை: எம்எல்ஏ நேரில் ஆறுதல்

மன்னார்குடி அருகே மாட்டுக் கொட்டகை செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. மாட்டின் உரிமையாளருக்கு எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆறுதல் கூறினார்.

மன்னார்குடி அருகே மாட்டுக் கொட்டகை செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்தது. மாட்டின் உரிமையாளருக்கு எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா ஆறுதல் கூறினார்.
 ராமபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கா. மாறன் (50). இவர் மனைவியுடன் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்றுவிட்டார். இவருக்குச் சொந்தமான பசு மற்றும் இரண்டு கன்றுக்குட்டிகளை வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக் கொட்டகையில் கட்டிவைத்திருந்தார்.திடீரென மாட்டுக் கொட்டகையின் மேற்கூரை தீப்பற்றி எரியத் தொடங்கிது. தகவலறிந்து வந்த மன்னார்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.
எனினும், சினைப் பசு மாடு மற்றும் இரண்டு கன்றுக் குட்டிகளும் தீக்காயம் அடைந்தன. மன்னார்குடி வருவாய் வட்டாட்சியர் எஸ். லெட்சுமி பிரபா நிகழ்விடத்தைப் பார்வையிட்டு விவரங்களைக் கேட்டறிந்தார்.
இதனிடையே, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, திமுக ஒன்றியச் செயலர் க. தனராஜ், இந்திய கம்யூனிஸ்ட் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை. செல்வராஜ், ஒன்றியச் செயலர் ஆர். வீரமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட நபருக்கு ஆறுதல் கூறினர்.  இதுகுறித்து மன்னார்குடி ஊரக போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com