கூத்தாநல்லூரில் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரத்தை செவ்வாய்க்கிழமை விநியோகித்தனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது அவசியம், செல்லிடப்பேசியை பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, குடிபோதையிலும், அதிக வேகமாகவும் வாகனங்களை இயக்கக் கூடாது, சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும் ஆகிய அறிவுரைகளை வழங்கும் வகையில் கூத்தாநல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.