பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குப் பாராட்டு

திருவாரூர் அருகே மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்

திருவாரூர் அருகே மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் அண்மையில் பாராட்டுத் தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்கரை வேலங்குடி சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கு முறையே ரூ. 5000, ரூ. 2000, ரூ. 1000 வழங்கப்பட்டது. மேலும், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 வழங்கப்பட்டது.பள்ளித் தலைமையாசிரியர் ரா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தனியார் நிறுவன பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com