திருவாரூர் அருகே மாங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் அண்மையில் பாராட்டுத் தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்கரை வேலங்குடி சிறகுகள் கல்வி அறக்கட்டளை சார்பில், அதிக மதிப்பெண்கள் பெற்ற 3 பேருக்கு முறையே ரூ. 5000, ரூ. 2000, ரூ. 1000 வழங்கப்பட்டது. மேலும், தமிழ்ப் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற 2 மாணவிகளுக்கு தலா ரூ. 1,500 வழங்கப்பட்டது.பள்ளித் தலைமையாசிரியர் ரா. விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற விழாவில், தனியார் நிறுவன பொது மேலாளர் கேசவன் பரிசுகளை வழங்கினார்.