கூத்தாநல்லூர் அருகே முன்விரோதத் தகராறில் 3 பேர் காயமடைந்தனர்.
கூத்தாநல்லூர் அருகேயுள்ள வேளுக்குடியைச் சேர்ந்தவர் கௌசல்யா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த குணா என்பவரை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்று விட்டனர். இதனால், இரு குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கௌசல்யா காணவில்லை என வேளுக்குடிக்கு வந்த குணா, கௌசல்யாவின் சகோதரர் தேவராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீங்கள் தான் கடத்தி வந்து விட்டீர்கள் என தகராறு செய்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், குணா மற்றும் வடகோவனூர் தமிழரசன் உள்ளிட்ட இருவரும், தேவராஜன், இவரது தந்தை நாகூரான், அம்மா வளர்மதி ஆகிய மூவரை தாக்கினராம். இதில், மூவருக்கு காயம் ஏற்பட்டதாகவும், தேவராஜன் மட்டும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் கூத்தாநல்லூர் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து, தமிழரசனை (23) கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.