குடிநீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பாக நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 44 கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரக்கோட்டையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம் மற்றும் பெரம்பூர் ஊராட்சியில் நீர்மேலாண்மை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு மண்டல அலுவலரும் உதவித் திட்ட அலுவலருமான பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கே. சந்தானகிருஷ்ண ரமேஷ், எம். தமிழ்ச்செல்வி, துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிச்சந்திரன், பாலசுப்பிரமணியன், முரளி, நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடிநீர் பாதுகாப்பு மற்றும் சேமிப்புத்தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.