நன்னிலம் பகுதியில் திங்கள்கிழமை லேசான மழை பெய்தது.
நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட நன்னிலம், மாப்பிள்ளைகுப்பம், ஆண்டிப்பந்தல், சன்னாநல்லூர் உள்ளிட்ட கிராம பகுதிகளில் அரை மணி நேரம் லேசான மழை பெய்தது. பல மாதங்களாக மழை பெய்யாமல் மிகுந்த ஏக்கத்தில் இருந்த இப்பகுதி பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் மகிழ்ச்சியை
ஏற்படுத்தியது.