பேருந்து கண்ணாடியை சேதப்படுத்தியவர் கைது

மன்னார்குடியில் மது போதையில் தனியார் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியவர்

மன்னார்குடியில் மது போதையில் தனியார் பேருந்தின் கண்ணாடியை சேதப்படுத்தியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு, தனியார் பேருந்து கும்பகோணத்துக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில், மதுப் போதையில் ஏறிய மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையைச் சேர்ந்த ச. திருநாவுக்கரசு (23) என்பவர், தெப்பக்குளம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் போது, பாக்கி பணம் வாங்குவது தொடர்பாக, பேருந்து நடத்துநர் ஜெ. கார்த்திக்குடன் தகராறில் ஈடுபட்டாராம்.
பின்னர், கீழே இறங்கி கல்லை வீசி பேருந்தின் பின்பக்க கண்ணாடியை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மன்னார்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, திருநாவுக்கரசை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com