விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்காத, பொதுப்பணித் துறை அதிகாரியைக் கண்டித்து

பாசன வடிகால் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்காத, பொதுப்பணித் துறை அதிகாரியைக் கண்டித்து நீடாமங்கலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் சங்கத் தலைவர் பாரதிமோகன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஞானமோகன், நீடாமங்கலம்  ஒன்றியச் செயலாளர் நடேச. தமிழார்வன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் டேவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திரளான விவசாயிகள் பங்கேற்று பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்து கோஷமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com