வையகளத்தூரில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள்

நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் அருகே உள்ள வையகளத்தூரில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில் குடியானத்தெருவில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. நாள்தோறும் அப்பகுதியில் மினிலாரிகள், வேன்கள் கதிர் அறுவடை இயந்திரம் என பல்வேறு வாகனங்கள் இந்த மின்கம்பிகளை மிகுந்த சிரமங்களுக்கிடையே கடந்து
செல்கின்றன. 
இதனால், மின் கம்பிகளால் எப்போது வேண்டுமானாலும் விபத்துகள் ஏற்படலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே நிலவிவருகிறது. எனவே, மின்வாரிய அதிகாரிகள் இப்பிரச்னையில் கவனம் செலுத்தி,  மின்கம்பிகளை உயரத்தில் செல்லும்படி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com