கைவினைக் கலைஞர் விருது: மாணவிக்கு ஆட்சியர் வாழ்த்து

தமிழக அரசின் சிறந்த கைவினைக் கலைஞர் விருது பெற்ற மாணவி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

தமிழக அரசின் சிறந்த கைவினைக் கலைஞர் விருது பெற்ற மாணவி, திருவாரூர் மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தமிழக அரசு ஆண்டுதோறும் கைவினைக் கலைஞர் மாவட்ட விருது வழங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்வேறு கலைஞர்களின் படைப்புகள் 2 மாத கால அவகாசத்தில் பெறப்பட்டு, பூம்புகார் கலை விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2018-2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த கைவினைக் கலைஞருக்கான விருது, திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் யோக அறிவுவிழி என்ற மாணவிக்கு வழங்கப்பட்டது. கரிகாலச் சோழன் கட்டிய கல்லணைக் காட்சி என்ற தலைப்பில் கண்ணாடி ஓவியம் வரைந்ததற்காக, தலைசிறந்த கைவினைக் கலைஞருக்கான விருது, ஊரகத்தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமினால் அண்மையில் அவருக்கு வழங்கப்பட்டது. விருது பெற்ற மாணவி யோக அறிவுவிழி, மாவட்ட ஆட்சியர் த. ஆனந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com