சாய் பாபா கோயிலில் சிறப்பு பூஜை

கூத்தாநல்லூரில் ஷீரடி சாய்பாபா கோயிலில், வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. 

கூத்தாநல்லூரில் ஷீரடி சாய்பாபா கோயிலில், வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. 
லெட்சுமாங்குடி, மரக்கடையில் அமைந்துள்ள ஷீரடி சாய் பாபா தியான பீடத்தில், சாய் பாபாவுக்கு, மஞ்சள் தூள், இளநீர், பன்னீர், தயிர், பால், பஞ்சாமிர்தம் மற்றும் அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களின் கூட்டுப் பிரார்த்தனைக்குப் பிறகு, அலங்காரம் செய்யப்பட்ட சாய் பாபாவுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா வெள்ளையன் மற்றும் பக்தர்கள் மேற்கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com