மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொண்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்தார்.
திருவாரூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: நாட்டின் அரசியலமைப்பு கேள்விக் குறியாகி விட்டது. மதச்சார்பின்மை கேள்விக்குறியாகி விட்டது. கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மத்திய அரசு, கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக மாநில உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள எடப்பாடி தலைமையிலான அரசு அந்த உரிமைகள் பறிபோவது குறித்தும், மக்கள் பாதிக்கப்படுவது குறித்தும் சிறிதும் கவலைப்படவில்லை. மத்திய அரசின் தயவில் ஆட்சியை தக்க வைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். எனவே, மக்களவைத் தேர்தலிலும், சட்டப் பேரவை இடைத் தேர்தலிலும், மக்கள் பிரச்னைகள் தொடர்பாக உரிய பிரசாரங்களை மேற்கொண்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றார்.