திருவாரூர் அருகே ஆற்றில் தவறி விழுந்த துப்புரவுப் பணியாளர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூர் அருகே உள்ள காட்டு நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (50). நகராட்சி துப்புரவுப் பணியாளரான இவர், விளமல் அருகே ஓடம்போக்கி ஆற்றில் குளிப்பதற்காக, வியாழக்கிழமை சென்றுள்ளார். அங்கு, நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்து விட்டாராம். அந்த வழியாக வந்தவர்கள் கண்ணனை மீட்டு, சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு, சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து, அவரது மகன் முருகவேல் அளித்த புகாரின் பேரில், திருவாரூர் நகரப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.